ஒரு காஃபியை போல..!
வாழ்வின் கனமான பக்கங்களைநிரப்பிக்கொண்டிருக்கிறேன்காலிப்பக்கங்கள் உண்மையில்கண்ணீர் காய்ந்த சருகுகள்இச்சருகுகளுக்கு உன்வாசனைத் திரவியம் பூசுகிறேன் கனத்த இதயத்துடன்நுரையீரலை நிறைத்துமெல்ல இலகிநினைவலகளில் நீந்துகிறதுஇந்நீச்சல் என் பேரமைதிநீ நீங்காத நாட்களில்,நீ நிலைத்திருந்த நேரங்களில்,என்னோடிருந்த புன்னகை..! நான் தூங்குவதற்காக விழித்திருந்த விழிகள்,இன்று மிகத் தொலைவில்ஏதோ ஒரு பிரபஞ்சத்தில்உறங்கிக்கொண்டிருக்கிறது உன் குரலாய் உன் சாயலாய்உன் மணமாய் உன் குணமாய்உன் அன்பாய் உன் கருணையாய்நீ எனைச் சூழ்ந்திருக்கிறாய்என்பதை நம்புவதற்காகஒரு வாசனைத்திரவியம் போதும்ஒரு காஃபியை போல..!