All Posts

All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 3

லெய்டன் ஒரு திட்டமிடப்பட்ட நகரம் என்று குறிப்பிட்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களும் நகரத்தைச் சுற்றியிருந்த சிங்கெல் கால்வாய் வளையமும் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கியது. ஒவ்வொரு நுழைவாயிலும் ஒரு தூக்குப் பாலம் அல்லது திறக்கும் பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. கால்வாய்களில் கப்பல்களும் படகுகளும் தடையின்றிச் செல்வதற்காக அவை தேவையான நேரங்களில் உயர்த்தப்பட்டு இயக்கப்பட்டன. அவற்றை இன்றும் பராமரித்து வருவது எனக்கு சுவாரசியமாக இருந்தது. எட்டு நுழைவாயில்களில் இன்று எஞ்சியிருப்பது கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள் மட்டுமே. மறைந்துபோன மற்ற […]

All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 2

லெய்டன் காற்றாலையை விட்டு நகரும்போது, அருகிலிருந்த சிங்கெல் பார்க்கில் ஒரு பெண் சிலை என் கவனத்தை ஈர்த்தது. அது 1945ஆம் ஆண்டு நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து நெதர்லாந்து விடுதலை பெற்றதை நினைவுகூர எழுப்பப்பட்டது. உலகப் போர்கள் ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதித்திருந்தன. அந்த வலிகளையும் மீண்டெழுந்த நம்பிக்கையையும் நினைவுகூரும் சின்னங்கள் இங்கு ஏராளம். அமைதியையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் வகையில் அந்த பெண் சிலை கையில் ஒரு மலர்ந்த கிளையை ஏந்தியிருக்கிறாள். ஒரு

All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 1

நெதர்லாந்தின் அடையாளங்களில் ஒன்று, பாரம்பரியக் காற்றாலைகள். அதைப் பார்ப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அது டச்சுக்காரர்களின் கண்டுபிடிப்பு இல்லை. பெர்சியாவிலிருந்து வந்த தொழில்நுட்பம். கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே கிழக்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் கோராசான் பகுதிகளில் அதன் ஆரம்ப வடிவமான செங்குத்துவடிவக் காற்றாலைகள்(vertical-axis windmills) இருந்தன. அஸ்பாத்(Asbad) எனப்படும் இக்காற்றாலைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்போது அவை செயல்பாட்டில் இல்லை. தொல்லியல் மரபுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன. நெதர்லாந்து காற்றாலைகள்

All Posts, கதைகள்

சங்கமம்

வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் செல்லம் என்று சொல்லிவிட முடியாது. விடுமுறை நாட்களில் மூவரும் சேர்ந்தே சாப்பிடும் வழக்கம். ஒருநாள் மதியம் சோறு, குழம்பு, பொரியல் , தட்டுகள் எல்லாம் பட்டாசாலைக்குப் போனது. நான் உருண்டைச்செம்பில் தண்ணீர் எடுத்துவரும் வழியில் கைநழுவியது. சத்தம் கேட்டு அப்பா வந்தார். ஒரு பொருளை ஒழுங்கா எடுத்துட்டு வரத்தெரியுதா? எதையெடுத்தாலும் கீழே போடு. நீயெல்லாம் எதுக்குத்தான் லாயக்கு? வசவு விழும்போதே அடுப்படிக்குள்ளிருந்து டங்..கென்று சத்தம். உள்ளேபோய் பார்த்தால் தண்ணீரை தாரைவார்த்துக் கொண்டு

All Posts, சிந்தனைத்துளிகள்

முத்துக் குளித்தல்

நான் பார்க்கின்ற உலகத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் நமக்கு வெளியே இருக்கின்ற உலகம் நிஜமானதா அல்லது நமக்கு உள்ளே இருக்கின்ற உலகம் நிஜமானதா? சூரியன் இன்று மறைக்கப்பட்டிருந்தது. மேகமூட்டங்கள் வென்றுவிட்டதாக தோற்றம் அளிக்கும் ஒரு காலை. சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிஜத்தை அந்த முழுமையை நான் அறிகிறேன். இந்த உடம்பு அறிந்திருக்கமுடியாது என்பதால்தான் விட்டமின் டியை மருந்தாக உட்கொள்கிறோம். அப்படியென்றால் மனிதஉடல் என்பதே முழுமையை அறிந்துகொள்ளத் தடையாய் இருக்கிறதா? அத்தடையை பொருட்படுத்தாதவர்கள் ஒருவேளை முழுமையைக் கண்டடைந்திருக்கலாம். மனித உடலின்

Scroll to Top